Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கத்தியை காட்டி பணம் பறிப்பு, மற்றும் இளம் பெண் மாயம்

0

திருச்சி காந்தி மார்க்கெட்டில் டிரைவரிடம் கத்திமுனையில் பணம் பறிப்பு .
சிறுவன் உள்பட 2 பேர் கைது.

திருச்சி அரியமங்கலம் நேருஜி நகர் சுவாமிநாதன் தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வம் (வயது 50 )டிரைவர் இவர் தஞ்சை ரோடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் நின்று கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த 2 பேர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டனர்.அதற்குள் கத்தியை காட்டி மிரட்டி டிரைவர் தமிழ் செல்வத்திடம் பணத்தை பிடுங்கி விட்டு வாகனத்தில் தப்பி ஓடிவிட்டனர் இது குறித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்து 17 வயது சிறுவன் மற்றும் அமீர் என்ற வாலிபரையும் கைது செய்தனர் இதேபோல் திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் சரகம் மத்திய பஸ் நிலையத்தில் பெருமாள் என்பவரிடம் பணத்தை பிக்பாக்கெட் அடித்ததாக அப்துல்காதர் |ஷர்புதீன் ஆகிய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் இளம் பெண் திடீர் மாயம் .

திருச்சி காந்தி மார்க்கெட் கோபாலகிருஷ்ணன் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகள் பூஞ்ஜோதி (வயது 19)இவர் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை இதுகுறித்து அவரது தாய் ஜெயலட்சுமி காந்தி மார்க்கெட் போலீசில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.