Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி திருவெறும்பூரில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை.

0

*திருவெறும்பூர் அருகே பட்டப்பகலில் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை போலீஸ் விசாரணை*

திருவெறும்பூர் அடுத்த வேங்கூர் பூசை துறையில் வசிப்பவர் காளிதாசன் இவர் அரியமங்கலத்தில் வெல்டிங் பட்டறை தொழில் நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு அரியமங்கலத்தில் உள்ள வெல்டிங் பட்டறை தொழிற்சாலைக்கு வந்து விட்டார்.

மதியம் சாப்பிடுவதற்கு வீட்டிற்கு வந்தவர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்பு வீட்டின் உள்ளே சென்று பார்க்கையில் பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது இதனால் பதட்டமடைந்த காளிதாசன் ,

இதுகுறித்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் போரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.