திருச்சி தெற்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி சார்பில் “சமத்துவ பொங்கல் விழா” திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைப்பெற்றது.
திருச்சி தெற்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி சார்பில் நடைப்பெற்ற தை திருநாள் விழாவில் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ரமேஷ் வரவேற்புரையாற்றினார்,
மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எம்.எல்.ஏ தலைமையில் நடைப்பெற்றது .
இந்த நிகழ்ச்சியில் கிராமிய கலை நிகழ்ச்சிகள், சிலம்பம் விளையாட்டு மற்றும் ஏழை எளியோர்க்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார் .
உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என். சேகரன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ், வண்ணை அரங்கநாதன், பகுதி செயலாளர் மதிவாணன், நீலமேகம், ஒன்றிய செயலாளர்கள் சபியுள்ள, செல்வராஜ் மற்றும் அணிகளின் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .