Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அரசு மருத்துவமனையில் நர்சுடன் டிரைவர் கள்ளக்காதல்

அரசு மருத்துவமனையில் நர்சுடன் டிரைவர் கள்ளக்காதல்

0

நாகர்கோவில்: குமரி அரசு ஆஸ்பத்திரி அறையில் நர்சும், கள்ளக்காதலனும் உல்லாசமாக இருந்தனர். அப்பகுதி இளைஞர்கள் அறையைப் பூட்டி கள்ளக்காதல் ஜோடியை சிறை வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குமரி மலையோர பகுதியில் அரசு மருத்துவனை ஒன்று உள்ளது. இதை மையமாக கொண்டு இயங்கும் 108 ஆம்புலன்சில் சுமார் 32 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் நர்சாக உள்ளார். இதற்கு முன்பு வேறு பகுதியில் உள்ள ஆம்புலன்சில் வேலை பார்த்தார். அப்போது ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த டிரைவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்களுக்கு இடையேயான பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.

அதன்படி தினசரி பணி நேரத்தின் போது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் 2 பேரும் உல்லாசமாக இருந்து வந்தனர்.
இவர்களது கள்ளக்காதல் நாளடைவில் அரசல் புரசலாக வெளி உலகிற்கு தெரியவந்தது. இது தொடர்பாக பிரச்னையும் வெடித்தது. தொடர்ந்து மலையோர பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையை மையமாக கொண்டு செயல்படும் 108 ஆம்புலன்ஸ்க்கு நர்ஸ் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இருப்பினும் கள்ளக்காதலனை மறக்க முடியாமல் தவித்தார். அதன்படி 2 பேரும் செல்போனில் வீடியோ கால் மூலம் மணிக்கணக்கில் பேசி வந்தனர். இந்த நிலையில் கொரோனா காரணமாக அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகள் அனுமதிக்கப்படவில்லை.

இதனால் அறைகள் அனைத்தும் காலியானது. இதை பயன்படுத்தி மருத்துவமனை அறையை தங்களது பள்ளியறையாக கள்ளக்காதல் ஜோடி மாற்றியது. அதன்படி நள்ளிரவு பைக்கில் கள்ளக்காதலனை மருத்துவமனைக்கு அழைத்தார் நர்ஸ். கள்ளக்காதலன் வந்ததும் ஏதாவது ஒரு அறைக்குள் சென்று 2 பேரும் கதவை மூடி கொள்வார்களாம். அதன் பிறகு உல்லாசமாக இரவை கழித்துவிட்டு காலையில் வெளியே வருவார்களாம். இதை அந்த பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் நோட்டமிட்டனர். தொடர்ந்து கள்ளகாதலர்களை கையும் களவுமாக பிடிக்க அவர்கள் முடிவு செய்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணி அளவில் பைக் ஒன்று வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்தது.

இதை பார்த்த இளைஞர்கள், 2 பேரையும் கண்காணிக்க தொடங்கினர். பைக்கில் வந்தவர் கையில் ஒரு பார்சலுடன் அறை கதவை தட்டினார். உடனே கதவு திறக்கப்பட்டது. பைக்கில் வந்தவர் அறைக்குள் சென்றதும் சற்றும் தாமதிக்காமல் கதவு பூட்டப்பட்டது. இதையடுத்து இளைஞர்கள் அறையின் கதவை வெளிபுறமாக பூட்டி கள்ளக்காதல் ஜோடியை சிறை வைத்தனர். தொடர்ந்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தனர். நள்ளிரவு நேரம் என்பதையும் பொருட்படுத்தாமல் அங்கு கூட்டம் கூடியது. இதனையடுத்து இரவு பணியில் இருந்த நர்சுகள் விரைந்து சென்று அறைக் கதவை திறந்து பார்த்தனர். அறையில் யாரும் இல்லை என்று கூறினர்.

ஆனால் மருத்துவமனையில் கூடி நின்றவர்கள் இதை ஏற்கவில்லை. பாத்ரூம் கதவை திறந்து பாருங்கள் என்று கோஷம் போட்டனர். உடனே பணியில் இருந்த நர்சுகள் பாத்ரூம் கதவை திறந்தனர். உள்ளே நர்சும், வாலிபரும் ஒளிந்து கொண்டு நிற்பதை கண்டு திடுக்கிட்டனர். உடனே வாலிபருடன் இருந்த நர்ஸ் இது எனது கணவர் என்று கூறி சமாளிக்க முயன்றார். உடனே பொது மக்கள் போலீசுக்கு தகவல் கொடுப்போம் என்று மிரட்டினர். இதனால் பயந்து போன 108 ஆம்புலன்ஸ் நர்ஸ் கண்ணீவிட்டு கதறினார். இந்த பரபரப்பு அதிகாலை சுமார் 3 மணிவரை நீடித்தது. தொடர்ந்து வேறு வழி இல்லாமல் சிக்கி கொண்ட கள்ளக்காதலர்கள் தாங்கள் செய்தது தவறு.

இனி ஒரு போதும் இது போன்ற செயலில் ஈடுபட மாட்டோம் என்று கெஞ்சி கூத்தாடினர். இதையடுத்து கள்ளக்காதல் ஜோடியை இளைஞர்கள், பொது மக்கள் விடுவித்தனர். அரசு மருத்துவமனையில் உல்லாசத்தில் ஈடுபட்ட கள்ளக்காதல் ஜோடி விடிய விடிய சிறை வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.