அப்பா சொல்லிட்டாரு; விஜயை முதல்வர் ஆக்குவோம். திருச்சியில் அதகளப்படுத்தும் போஸ்டர்கள்
அப்பா சொல்லிட்டாரு; விஜயை முதல்வர் ஆக்குவோம். திருச்சியில் அதகளப்படுத்தும் போஸ்டர்கள்
*அப்பா சொல்லிட்டாரு; ஆட்சிக் கட்டிலில் அமர வைப்போம்!’ – போஸ்டரில் அதகளப்படுத்தும் விஜய் ரசிகர்கள்*
போஸ்டர் விவகாரம் குறித்து திருச்சி விஜய் ரசிகர்கள் சிலரிடம் பேசினோம். ”ஜெயலலிதா, கருணாநிதிக்குப் பிறகு தகுதியான தலைவர்கள் தமிழ்நாட்டில் இல்லை. இரும்பு பெண்மணியாக இருந்து தமிழகத்தையும், கட்சியையும் வழிநடத்தி வந்தவர் ஜெயலலிதா.
ஆனால், இப்போது ஆட்சியில் உள்ளவர்கள் எல்லாவற்றையும் பி.ஜே.பி-யிடம் அடமானம் வைத்துவிட்டு அவர்களும், அவர்களது குடும்பத்தினரும் வாழ்ந்தால் போதும் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தி.மு.க-வைப்பற்றி சொல்லவேண்டிய தேவையில்லை. தற்பொழுது தகுதியே இல்லாதவர்கள் எல்லாம் ஆட்சியில் அமரும் போது என்நேரமும் மக்களைப்பற்றி யோசிக்கும் எங்களது தளபதி ஆட்சியில் கட்டிலில் அமர்ந்தால் என்ன தவறு. எங்க தலைவருடைய அப்பா சொல்லிட்டாரு. இனி எங்க தலைவரை ஆட்சிக் அரியணையில் அமரவைப்போம்” என்று உணர்வு பொங்கப் பேசினர்.