Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பாலக்கரையில் ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்து நெரிசல்.

திருச்சி பாலக்கரையில் ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்து நெரிசல்.

0

திருச்சி பாலக்கரையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் உபியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி பாலக்கரை ரவுண்டானா அருகில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருச்சி மாவட்ட தலைவர் சபியுல்லா, திருச்சி மண்டல தலைவர் அமீர் பாஷா, எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் ஹஸ்ஸான் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இவர்களில் யாரும் முகக்கவசம் அணிய வில்லை, சமூக இடைவெளியும் கடை பிடிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது., சாதாரண பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கும் காவல்துறையும் கண்டுகொள்ளவில்லை.

போக்குவரத்து நெரிசலான இந்தப் பகுதியில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையினர் ஏன் அனுமதி அளிக்கின்றனர் என பொதுமக்கள் புலம்பியவாறு சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.