திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ஓராண்டில் பயன்பாட்டிற்கு வரும் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.


திருச்சி ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அடுத்த நவம்பரில் பயன்பாட்டுக்கு வரும்
அமைச்சர் கே.என்.நேரு பேட்டி .
திருச்சி பஞ்சப்பூரில்
ரூ 349.98 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் பல்வகை பயன்பாட்டு மையம் கட்டுமான பணிகளை தொடக்கி வைத்தபின்
பங்கேற்ற நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர்
கே. என் .நேரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-
திருச்சிபஞ்சப்பூரில் அமையும் இந்த ஒருங்கிணைந்த பேருந்து முனையம் மொத்த மதிப்பீடு 349.98 கோடியாகும்.
கட்டுமான பணிகள் ஓராண்டிற்குள் முடிக்கப்பட்டு,
அடுத்தாண்டு நவம்பரில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
திருச்சி
அண்ணா சாலை முதல் ஜங்சன் வரை
உயர் மட்ட பாலம் ரூ.966 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
நகர்புறங்களில் சாலை அமைக்கும் பணிகள் மழையால் சில இடங்களில் தாமதப்படுகிறது.
ஓராண்டில் எவ்வளவு
கோடி ஒதுக்கி, எத்தனை திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்? என்பதனை அவர்கள் (அதிமுகவினர்) ஆராய்ந்து பார்க்க வேண்டும் .
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
பின்னர்அவரிடம், மழை வந்தால் திமுக சாயம் வெளுத்து விடும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர்கள் தான் (அதிமுகவினர்) சாயம் போவார்கள். நல்ல வேலை தொடங்கும் போது ஏன் அவரை பற்றியெல்லாம் பேச வேண்டும்?. ஆட்சிக்கு வந்து ஒன்றே கால் ஆண்டுகளில் திருச்சிக்கு, 5,000 கோடி ரூபாய்க்கு திட்டங்களை முதல்வர் கொடுத்துள்ளார்.
கடந்த பத்தாண்டுகளில் திருச்சிக்கு எத்தனை கோடிக்கு திட்டங்கள் கொண்டு வந்தார்கள் என்று அவர்களை கேளுங்கள். எந்த காலத்திலும் சாயம் போகாத கட்சி திமுக என்று அமைச்சர் கே.என். நேரு பதிலளித்தார்.
பேட்டியின் போது கலெக்டர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, எம்.எல்.ஏக்கள் காடுவெட்டி தியாகராஜன், சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், அப்துல் சமது, காவல்துறை ஆணையர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், கோட்டத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்காதேவி மற்றும் கவுன்சிலர்கள் முத்துச்செல்வம், காஜாமலை விஜய், மஞ்சுளா பாலசுப்ரமணியன், கவிதா செல்வம், கலைச்செல்வி, மற்றும் கவுன்சிலர்கள் பைஸ் அகமது, பிராபகரன், தி.மு.க. நிர்வாகிகள் உள்பட ஏராளமான பலர் உடன் இருந்தனர்.

