


திருச்சியில்
முதியவரை தாக்கிய வாலிபர் கைது.
திருச்சி புத்தூர் நடு வண்ணாரப்பேட்டை திருவிக நகர் தொகுதியை சேர்ந்தவர் சிவசங்கர் (வயது22). இவர் அவருடைய தாயுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு கடுமையான வார்த்தைகளால் பேசி வந்துள்ளார்.
கடந்த ஏழாம் தேதி மீண்டும் அதே போல் தகராறில் ஈடுபட்டதால், சிவசங்கரன் தாத்தா கலியராஜ் (வயது65) தன்னுடைய மகளை திட்டுவதும், சண்டையிடுவதும் ஏன் என சிவசங்கரிடம் கேள்வி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவசங்கர் அவரையும் கடுமையான வார்த்தைகளால் பேசி ஸ்க்ரூ டிரைவரை கொண்டு அவருடைய விலா எலும்பில் குத்தியதோடு பாட்டியையும் அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த கலியராஜ் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைககாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து காளிராஜ் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிவசங்கரை கைது செய்தனர்.

