Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஆமினி பஸ்ஸிலேயே உயிரிழந்த டிரைவர்.

0

'- Advertisement -

திருச்சி அருகே டிரைவர் பரிதாப சாவு.

நெல்லை மாவட்டம் சங்கர் நகர் பழைய பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அண்ண லட்சுமணன் (வயது 54) டிரைவர்.

சம்பவத்தன்று இவர் சென்னையிலிருந்து நெல்லை செல்வதற்காக ஆம்னி பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த ஆம்னி பஸ் திருச்சி மதுரை பைபாஸ் ரோடு அருகே வந்தபோது அண்ண லட்சுமணனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

உடனே அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.