திருச்சி மத்திய பேருந்து
நிலையத்தில்
அடையாளம் தெரியாத ஆணின் பிணம் .
திருச்சி மத்திய பேருந்து நிலையம் சென்னை பஸ் நிறுத்தம் அருகில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயக்க நிலையில் கிடந்தார்.
அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இறந்தார் .
இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற முழு விவரம் தெரியவில்லை.
இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க் கொண்டு வருகின்றனர் .