Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி இந்திரா கணேசன் கல்லூரியில் இரத்ததான முகாம்.பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் துவக்கி வைத்தார்.

0

'- Advertisement -

இந்திரா கணேசன் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் துவக்கி வைத்தார் .

பாரதிதாசன் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் அவர்களின்  வழிகாட்டுதல்படி, இந்தியன் ரெட் கிராஸ்  சொசைட்டியின் திருச்சி மாவட்ட கிளை, பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம் மற்றும் இந்திரா கணேசன் கல்விக் குழுமம் இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் இன்று

Suresh

இந்திரா கணேசன் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் தலைமையேற்று துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் கணேசன், இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் செயலாளரும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் திருச்சி மாவட்ட கிளையின் தலைவருமான இன்ஜினியர் ராஜசேகர், இந்திரா கணேசன்  கல்வி நிறுவனங்களின் இயக்குநர் டாக்டர். பாலகிருஷ்ணன், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர். வெற்றிவேல் மற்றும் இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.

இந்த மாபெரும் இரத்ததான முகாமில் இந்திரா கணேசன் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்  ரத்த தானம் செய்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.