பெரியாரின் 143 ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி குறித்து,முன்னாள் எம்.பியும் , திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
நாளை காலை 10.00 மணிக்கு தந்தை பெரியாரின் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவெறும்பூர் காட்டூர் மெயின் ரோட்டில் உள்ள பெரியாரின்
திருவுருவ சிலைக்கு அஇஅதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியதை செலுத்தபடவுள்ளது.
அதுசமயம் மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி, எம்,ஜி,ஆர் மன்றம்,
அம்மா பேரவை, எம்.ஜி.ஆர் இளைஞர் அணி, மகளீர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம்,
வழக்கறிஞர் பிரிவு. சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப்பிரிவு, மீனவர் அணி, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு, வர்த்தக அணி பகுதி கழக, நகர கழக, ஒன்றிய, பேரூர் ஊராட்சி கழக. கிளை கழக, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்,
முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் செயல்வீரர்கள் வீராங்கணைகள், மற்றும் கழகத்தின் பல்வேறு அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகளும், கலந்துகொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்
கொள்கின்றேன்
என ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.