அண்ணாவின் 113வது பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.
பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்தநாள் விழா.

லால்குடி தொகுதி, புள்ளம்பாடியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் அவர்கள்
மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்கள்..

அது சமயம், ஒன்றிய கழக செயலாளர்கள் T.ராஜாராம், T.N.சிவகுமார், சூப்பர் T.N.நடேசன், அசோகன், கும்பகுடி T.கோவிந்தராஜ், மாவட்ட அவைத்தலைவர் பர்வீன்கணி, மகளிர் அணி செயலாளர் செல்வி,MGR மன்ற செயலாளர் S.M.பாலன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் அன்பில் தர்மதுரை, மாவட்ட பாசறை செயலாளர் VDM அருண் நேரு, சிறுபான்மை பிரிவு செயலாளர் டோமினிக்,
பகுதி கழக செயலாளர் தண்டபாணி, மற்றும் குண்டூர் செல்வராஜ்,
மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய அணி நிர்வாகிகள், ஒன்றிய கழக, பேரூர் கழக, ஊராட்சி கழக, கிளை கழக நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

