முதல் பிறை தென்பட்டதால் 26ந் தேதி மிலாது நபி பண்டிகை. திருச்சி அரசு டவுன் ஹாஜி அறிவிப்பு..
திருச்சி மாவட்ட ஹிலால் கமிட்டி தலைவரும், திருச்சி மாவட்ட அரசு காஜி ஜலீல் சுல்தான் ஆலிம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 15ந்தேதி ரபிஉல் அல்வல் மாத முதல் பிறை ஆரம்பம் என்று அறிவித்துள்ளார். மேலும் வருகிற 26 ந்தேதி (புதன்கிழமை) மிலாதுன் நபி பண்டிகை எனவும் அறிவித்துள்ளார்.
எனவே முஸ்லிம் மக்கள் அனைவரும் நபி அவர்கள் காட்டிய சுன்னத்தான வழியை பின்பற்றி நடந்து இறைவன் அதிகமாக தொழுவது, நபிலான வணக்கங்களும், தான தர்மங்களில் ஈடுபட்டு உணவு அபிவிருத்திக்காகவும், ஆயுள் அதிகரிக்கவும், நம் சகோதர சமுதாய மக்களுடன் ஒற்றுமை யுடனும் மத நல்லிணக்கத்துடனும் இணைந்து வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அரசு டவுன் காஜி ஜலீல் சுல்தான் தெரிவித்துள்ளார்.

