Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பிரைனோ பிரைன் சார்பில் மண்டல அளவிலான அபாகஸ் போட்டி 3000 மாணவ மாணவிகள் பங்கேற்பு.

0

'- Advertisement -

Ad banner

திருச்சி பிரைனோ பிரைன் சார்பில் மண்டல அளவிலான அபாகஸ் போட்டி

3000 மாணவ மாணவிகள் பங்கேற்பு.

திருச்சி பிரைனோ பிரைன் சார்பில் ஆண்டுதோறும் அபாகஸ் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 179 வது மண்டல அளவிலான அபாகஸ் போட்டி திருச்சி பஞ்சபூர் அருகே உள்ள கிறிஸ்டல் மஹாலில் நடைபெற்றது.

இதில்

11 மாவட்டங்களை சேர்ந்த 4 முதல் 14 வயது குழந்தைகளுக்கான அபாகஸ் மனக்கணித போட்டி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பிரைனோ பிரைன் இன்டர்நேஷனல் தொழில்நுட்ப இயக்குனர் அருள் சுப்பிரமணியம் பங்கேற்றார்.

மண்டல பொறுப்பாளர் ப்ரியா சிவலிங்கம் முன்னிலை வகித்தார். இதில் 3000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் போட்டியில் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ், பதக்கம், பரிசு வழங்கப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.