திருச்சி உறையூரில். சாலையில் நடந்து சென்ற தொழிலாளியிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது.ஒருவர் எஸ்கேப்
திருச்சி உறையூரில். சாலையில் நடந்து சென்ற தொழிலாளியிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது. மேலும் ஒருவருக்கு வலை.
கரூர் மாவட்டம் குளித்தலை நச்சலூர் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் ( வயது 41 ) இவர் திருச்சி உறையூர் அண்ணாமலை நகர் குறிஞ்சி ரோடு ஜங்ஷன் பகுதியில் நடந்து சென்று உள்ளார் அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று மர்ம நபர்கள் அவர் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து பாலமுருகன் உறையூர் காவல் நிலைய போலீசார் இடம் புகார் செய்தார் அந்த புகாரின் பேரில் உறையூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் செல்போனை பறித்துச் சென்ற உறையூர் ராமலிங்க நகர் அகிலா பால் கார்டன் பகுதியைச் சேர்ந்த சித்தார்த் (வயது 19) ராமலிங்க நகர் மூன்றாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்த சுதர்சன் (வயது 19) ஆகிய இரண்டு வாலிபர்களை கைது செய்து உள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய பாரத் என்பவரை ஒரே ஒரு காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.

