முதல்வர் விஜய், அமைச்சர் ஆனந்த் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு தங்கத்தேர் இழுத்ததை தொடர்ந்து முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கினார் ஆர்.கே.ராஜா

தமிழக முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் , தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர், தமிழக ஊராக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று திருச்சி திருவானைக்காவல் ராகவேந்திரா கோவிலில் தங்க தேர் இழுத்த ஆர். கே .ராஜா இன்று திருச்சி புத்தூர் அமைதி முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு மதிய உணவு வழங்கினார்.

முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அக்பர் அலி, நந்தகுமார், சுப்பிரமணி, சதீஷ்குமார்,சரண்ராஜ், ஆசிப் கோகுல்,தனசேகர், ஹரிஹரன் , கார்த்திக்,டேவிட், அலெக்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

