Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம்” அரசாணையை ரத்து செய்யக்கோரி கருப்பு பேட்ச் அணிந்து போராட்டம்,

0

'- Advertisement -

உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம்” அரசாணையை ரத்து செய்யக்கோரி கருப்பு பேட்ச் அணிந்து போராட்டம்,

Ad banner

திருச்சியில் தோட்டக்கலை அலுவலர்கள் கருப்பு பேட்ச் அணிந்து போராட்டம்.

கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு.

TVK ad

திமுக ஆட்சிகாலத்தில் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் பொறியியல் ஆகிய 4 முக்கியத் துறைகளின் களப்பணிகளை ஒன்றிணைத்து கொண்டுவரப்பட்ட “உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம்” அரசாணையை ரத்து செய்யக்கோரி,

தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒருபகுதியாக திருச்சியிலும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிசெய்து வருகிறார்கள்

.திருச்சி மாவட்டத்தில் சுமார் நூறு அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், தொழில்நுட்பப் பரவலையும் பாதிக்கும் யு. ஏ. டி.டி. 2.0 திட்டத்தை விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசு கைவிட வேண்டுமென வலியுறுத்தி வருகிறார்கள்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.