இன்று திருச்சி வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு வீரவரவேற்பு .அனைவரும் திரளாக பங்கேற்க மாவட்ட செயலாளர் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு
திமுக இளைஞர் அணி செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு திருச்சியில் வீரவரவேற்பு .
திருச்சி தெற்கு மாவட்டக் கழக உடன்பிறப்புகளுக்கு மாவட்ட கழகச் செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள்!
நமது கழகத்தின் இளைஞரணிச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான

உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று (27.06.2026) இன்று மாலை சரியாக ஏழு மணி அளவில் திருச்சி விமான நிலையம் வருகை தர உள்ளார்
நமது கழகத்தின் செயல்வீரரை, வரவேற்பது நமது கடமையாகும்.
எனவே, திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட-ஒன்றிய-நகர-பேரூர்-கிளைக் கழக நிர்வாகிகள், சாற்பு அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுகிறேன்.
என திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

