திருச்சியில் பேரம் பேசிய பெண்ணை ஆபாசமாக திட்டிய ஆட்டோ டிரைவர் கைது
திருச்சி என்எஸ்சிபி சாலை பகுதியை சேர்ந்தவர் நிவேதா (வயது 27) இவர் சம்பவத்தன்று ஆட்டோவில் வெளியே பயணம் மேற்கொண்டார் அப்போது அங்கிருந்த ஒரு ஆட்டோவை அணுகினார், ஆட்டோவை
தென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்த முகமது மைதீன் (வயது 28 ) ஓட்டினார். அப்போது நிவேதாவிற்கும் ஆட்டோ டிரைவருக்கும் இடையே கட்டணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது இதில் ஆட்டோ டிரைவர் முகமது மைதீன் நிவேதாவை தகாத வார்த்தைகளால் திட்டி அவரை தவறாக பேசியுள்ளார். இதுகுறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது மைதினை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.

