திருச்சி அதிமுக முன்னாள் வடக்கு மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் வழக்கறிஞர் தேவா ஏற்பாட்டில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவரும்,முன்னாள் அமைச்சருமான கு.ப. கிருஷ்ணன் முன்னிலையில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளரும், முன்னாள் ஒன்றிய கவுன்சிலருமான கார்த்தி இன்று காலை தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்.

இன்னும் ஓரிரு நாட்களில் திருச்சி புங்கனூர் கிராமத்தில் உள்ள அனைத்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை தமிழக வெற்றி கழகத்தில் இணைக்க உள்ளதாக கூறினார் கார்த்தி.
புங்கனூர் கார்த்தி அதிமுகவிலிருந்து விலகி உள்ளதால் ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுகவிற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

