ஸ்ரீரங்கத்தில் போதை மாத்திரை விற்பனை செய்த இரண்டு ரவுடிகள் கைது.

ஸ்ரீரங்கம் ரெயில்வே பாலம் அருகே போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையில் போலீசார் அங்கு சென்று உன் சோதனை மேற்கண்ட போது இரண்டு வாலிபர்கள் போதை மாத்திரை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் அந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தபோது ஸ்ரீரங்கம் கீதா புரத்தை சேர்ந்த பிரவீன் குமார் (வயது 29) திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த புல்லட் மணி (வயது 32) ஆகிய இரண்டு என தெரியவந்தது இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

