Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி வயலூர் கோவிலில், வைகாசி விசாகப் பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

0

'- Advertisement -

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற திருச்சி வயலூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில், இந்த ஆண்டிற்கான வைகாசி விசாகப் பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் மிக விமரிசையாகத் தொடங்கியது.

Ad banner

திருச்சி அருகே உள்ள வயலூரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முருகன் கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டு திருவிழா நேற்று காலை 11 மணிக்குக் பாரம்பரிய முறைப்படி கொடியேற்றத்துடன் பக்திப் பரவசத்துடன் தொடங்கியது.

கொடியேற்ற நிகழ்விற்கு முன்னதாக, வெள்ளி கேடயத்தில் எழுந்தருளிய முத்துக்குமார சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு “அரோகரா” கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு 8 மணிக்கு முத்துக்குமார சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, வரும் நாட்களில் தினசரி காலை மற்றும் இரவு நேரங்களில் சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகங்களும், பல்வேறு வாகனங்களில் வீதி உலா நிகழ்வுகளும் நடைபெற உள்ளன.

இதற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.