திருச்சியில் துப்புரவு பணியாளர் தற்கொலை.

திருச்சியில் துப்புரவு பணியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 56 ) இவர் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார்
மேலும் அவர் காச நோயால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டிருந்தால் ம நிலையில் மிகுந்த மன உளைச்சலில் இருந்த முருகன் நேற்று திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து மகாத்மா காந்தி நினைவுஅரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

