Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

லால்குடி அருகே த.வெ.க. வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனின் உறவினர் வீட்டில் ரூ. 50 லட்சம் பறிமுதல்.

0

'- Advertisement -

லால்குடி அருகே

Ad banner

த.வெ.க. வேட்பாளர்

கு.ப. கிருஷ்ணனின் உறவினர் வீட்டில் ரூ. 50 லட்சம் பறிமுதல்.

 

 

வருமான வரித்துறையினர் விசாரணை

திருச்சி மார்ச் 3

தமிழக சட்டமன்றத்திற்கு வருகிற 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில்

வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை கொடுப்பதை தடுப்பதற்காக தமிழக முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் இரவு பகலாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வளவனூர் பகுதியில் ஒருவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பல லட்சம் பணம் பதுக்கி வைத்திருப்பதாக லால்குடி தாசில்தாரூம், தேர்தல் நடத்தும் அலுவலருமான தமிழ்ச்செல்வனுக்கு தகவல் கிடைத்தது உடனே அங்கு பறக்கும் படை விரைந்து சென்று சோதனையிட்டனர்.

இதில் கட்டு கட்டாக பணம் சிக்கியது.

பின்னர்

ரூ.10 லட்சத்துக்கு மேல் இருப்பது தெரிந்ததால், தேர்தல் அதிகாரி தமிழ்ச்செல்வன் வருமான வரித்துறையினருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் வருமான வரித்துறை அதிகாரிகள் சல்லடை போட்டு ரூ.50 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

உரிய ஆவணங்கள் இல்லாததால் இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பணத்துடன் சிக்கிக் கொண்டவர் தமிழக வெற்றி கழக வேட்பாளர் கு.ப. கிருஷ்ணனின் நெருங்கிய உறவினர் என கூறப்பட்டது.

இந்த சம்பவம் லால்குடி தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.