Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல், நரை முடியை வேரிலிருந்தே கருமையாக்க உதவும் அதிசய இலை.இனி கெமிக்கல் டை தேவை இல்லை

0

'- Advertisement -

இன்றைய அவசர உலகில் உணவுப் பழக்கம், மன அழுத்தம் மற்றும் சுற்றுச்சூழல் மாசு காரணமாக மிக இளம் வயதிலேயே பலருக்கும் நரை முடி ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது

 

Ad banner

இளநரைக்கு இயற்கையாகவே சில பொக்கிஷங்கள் நமக்கு கிடைத்துள்ளன.. அதில் ஒன்றுதான் கரிசலாங்கண்ணி கீரை. அதை பற்றிதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

 

இளநரையை மறைக்க பலரும் ரசாயனங்கள் கலந்த ஹேர் டைகளை நாடுகின்றனர். அவைகள் தற்காலிகமாக முடியை கருப்பாக்கினாலும், நாளடைவில் உச்சந்தலையில் அலர்ஜி, முடி உதிர்தல் மற்றும் கண்களுக்கு பாதிப்பு போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன.

 

ஆனால், நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கை முறையிலான ஒரு அதிசய இலை, எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல், நரை முடியை வேரிலிருந்தே கருமையாக்க உதவுகிறது. அந்த மகத்துவமான இலைதான் கரிசலாங்கண்ணி.

 

கரிசலாங்கண்ணி கீரையை “பிருங்கராஜ்” என்று ஆயுர்வேதத்தில் சொல்வார்கள். இது தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகும். இதில் உள்ள இயற்கை நிறமிகள் நரை முடியை உடனடியாக கருமையாக்குவது மட்டுமல்லாமல், முடியின் வேர்க்கால்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளித்து முடியை அடர்த்தியாக வளரச் செய்கிறது.

 

இதில் வெள்ளை கரிசலாங்கண்ணி மற்றும் மஞ்சள் கரிசலாங்கண்ணி என இரு வகைகள் இருந்தாலும், கூந்தல் பராமரிப்பிற்கு மஞ்சள் கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த பலனைத் தருகிறது.

 

இந்த அதிசய இலையை பயன்படுத்தி நரை முடியை மறைக்க ஒரு எளிய கலவையை வீட்டிலேயே தயார் செய்யலாம். ஒரு கைப்பிடி அளவு புதிய கரிசலாங்கண்ணி இலைகளை எடுத்துக்கொண்டு, அதை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

 

இதனுடன் சிறிதளவு மருதாணி இலைகள் மற்றும் நெல்லிக்காய் பொடியைச் சேர்த்து மிக்ஸியில் அரைத்து விழுதாக மாற்றிக் கொள்ளவும். இந்த விழுதை இரும்புச் சட்டியில் ஒரு இரவு முழுவதும் அப்படியே வைத்திருந்தால், இரும்புடன் வினைபுரிந்து அந்த கலவை அடர் கறுப்பு நிறமாக மாறும்.

 

மறுநாள் காலையில் இந்தக் கலவையை தலையில் வேர்க்கால்கள் முதல் நுனி வரை நன்றாகத் தேய்த்து தடவ வேண்டும். சுமார் ஒரு மணி நேரம் கழித்து சீயக்காய் அல்லது கெமிக்கல் குறைவான ஷாம்பு கொண்டு தலையை அலசினால், முதல் பயன்பாட்டிலேயே நரை முடி மறைந்து கூந்தல் கருகருவென மாறுவதை நீங்கள் உணர முடியும்.

 

அதேபோல, கரிசலாங்கண்ணி, ஆவாரம்பூ இந்த இரண்டையும் அரைத்து உலர வைத்து, பிறகு, தேங்காய் எண்ணெயில் கலந்து, மிதமான சூட்டில் காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வந்தாலும் மிகுந்த பலன் தரும்

 

இதில் ஹைலைட் என்ன தெரியுமா, இது வெறும் மேலோட்டமான நிறமாற்றம் மட்டுமல்லாமல், முடியின் மெலனின் உற்பத்தியை தூண்டி இயற்கையான கருமை நிறத்தை நிலைக்க செய்கிறது.

 

இந்த இயற்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் முடி உதிர்தல் பிரச்சனை முழுமையாகக் குறைகிறது. கரிசலாங்கண்ணி இலையில் உள்ள குளிர்ச்சித் தன்மை கண்களுக்குத் தெளிவையும், உடல் சூட்டைத் தணிக்கும் ஆற்றலையும் கொண்டது.

 

ரசாயன டைகள் பயன்படுத்துவதால் ஏற்படும் நரை முடியின் தீவிரத்தை இது கட்டுப்படுத்துகிறது. வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை இந்த முறையைப் பின்பற்றி வந்தால், இனி வாழ்நாள் முழுவதும் நீங்கள் ஹேர் டை தேடி அலைய வேண்டிய அவசியமே இருக்காது. இயற்கை நமக்கு அளித்த இந்த எளிய பொக்கிஷத்தைப் பயன்படுத்தி, பக்கவிளைவுகள் இல்லாத கருகரு கூந்தலை மிக எளிதாக பெறலாம் என கூறப்பட்டுள்ளது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.