திருச்சி சுப்பிரமணியபுரம் எம்ஜிஆர் சிலைக்கு உடனடியாக விடுதலை கொடுத்த பகுதி செயலாளர் வெங்கட் பிரபுவுக்கு குவிந்து வரும் பாராட்டு.
திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட சுப்ரமணியபுரம் புதுக்கோட்டை மெயின் ரோட்டில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலை இன்று மாலை வரை மூடி வைக்கப்பட்டுள்ளதாக திருச்சி எக்ஸ்பிரஸில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.
அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் நடவடிக்கை எடுக்காததால் சிலை மூடி வைக்கப்பட்டுள்ளது அகற்றப்படவில்லை எனக் கூறப்பட்ட நிலையில்
இந்தச் செய்தியை கண்டவுடன் ஏர்போர்ட் வடக்கு பகுதி செயலாளர் வெங்கட் பிரபு எம்ஜிஆர் சிலை அமைந்துள்ள இடத்திற்கு சென்று அதிகாரிகளுடன் பேசி உடனடியாக எம்ஜிஆர் சிலையை மூடி இருந்த துணியினை அகற்றினார்.
அதிமுக ஏர்போர்ட் வடக்கு பகுதி செயலாளர் வெங்கட் பிரபுவின் இந்த அதிரடி நடவடிக்கையை அதிமுக தொண்டர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

