திருச்சியில் சிறுமியை அழைத்து சென்று உல்லாசமாக இருந்த
காதலன் கைது .
திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் குமார் (வயது 24). இவருக்கும் 15 வயது சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது.
இதை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர் பின்னர் மகளை கண்டித்தனர்.
மேலும் நவீன் குமாருடன் பேச தடை விதித்தனர். இந்தத நிலையில் நவீன் குமார் அந்த சிறுமியை நைசாக பேசி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் இனாம்தார் தோப்பு பகுதிக்கு அழைத்துச் சென்று அந்த சிறுமியுடன் கட்டாய உடல் உறவு கொண்டதாக கூறப்படுகிறது .இது பற்றி சிறுமியின் தாயார் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் நவீன் குமார் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

