திருச்சியில் புரோட்டா சாப்பிட்ட வாலிபர் சாவு .
ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை ,
திருச்சி கே. கே. நகர் மாணிக்கம் பிள்ளை நகர் பகுதியை சேர்ந்தவர் மாதவன் இவரது மகன் சாமுவேல் விஜயகுமார் (வயது 37) இவர் மோப்ப நாய் பாதுகாப்பு சேவையில் பணிபுரிந்து வந்து உள்ளார்.
இவர் கடந்த 14 ந்தேதி இரவு ஒரு கடையிலிருந்து புரோட்டா வாங்கி வந்து சாப்பிட்டு உள்ளார். இந்நிலையில் நேற்று
15 ந்தேதி பொங்கல்
அன்று காலை அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து அவரை ஆபத்தான நிலையில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தினர். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவ குழுவினர் சாமுவேல் விஜயகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இந்த சம்பவம் குறித்து ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து புரோட்டா சாப்பிட்டதால் தான் வாலிபர் உயிரிழந்தாரா?என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

புரோட்டா சாப்பிட்ட வாலிபர் இறந்த சம்பவம் ஏர்போர்ட் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

