மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது. திருச்சியில் பரபரப்பு சம்பவம்.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு 2 பெண்கள் உள்பட மூன்று பேர் கைது. திருச்சியில் பரபரப்பு சம்பவம்.
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அதே பகுதியில் உள்ள சுபலட்சுமி ( வயது 69 ) என்ற மூதாட்டி வீட்டில் வீட்டு வேலைகள் செய்து வருகிறார். வீட்டு வேலை செய்து வரும் அவருக்கு 25 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் உள்ளார்.சுபலட்சுமியின் உறவினர் வயலூர் சாலை சேர்ந்த சிவக்கலா (வயது 51. )
இவர் அந்த 25 வயது பெண்ணை வயலூர் முருகன் கோயிலுக்கு அழைத்துச் செல்வதாக கூறி தன் வீட்டிற்கு அழைத்து வந்து உள்ளார்.அங்கு அவரை அவரது உறவினரான பாலசுப்பிரமணியன் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து உள்ளார். அதோடு சுபலட்சுமி வீட்டில் சிவ லோகேஷ் என்பவரும் அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார் 
இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பாலசுப்பிரமணியன், சுபலட்சுமி, மற்றும் சிவகலா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
மேலும் சிவ லோகேஷை தேடி வருகின்றனர்.

