திருச்சி பாலக்கரையில் மதுவுக்கு அடிமையானவர் சுருண்டு விழுந்து சாவு .
பாலக்கரை காவல் நிலைய போலீசார் விசாரணை
திருச்சி தீரன் நகர் பெரியார் தந்தை பெரியார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரங்கராஜன் (வயது 58). இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ளனர் ரெண்டு பேருக்கும் திருமணம் முடிந்துவிட்டது.
ரங்கராஜனுக்கு மதுப்பழக்கம் இருந்து வந்துள்ளது .
மதுவுக்கு அடிமையானதால் குடும்பத் தகராறு ஏற்பட்டது. பின்னர் அவரது மனைவி சியாமளா தேவி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கணவனை பிரிந்து சென்று விட்டார் .பின்னர் தனியாக வசித்து வந்த ரங்கராஜன் அளவுக்கு அதிகமான மதுவுக்கு அடிமையானார் .
சம்பவத்தன்று மது போதையில் மயங்கி கிடந்தார்.. இதனை அறிந்த அவரது சகோதரி திலகா அவரை மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ரெங்கராஜன் பரிதாபமாக உயிரிழந்தார்
இதுகுறித்து சியாமளா தேவி அளித்த புகாரின் அடிப்படையில் பாலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

