திருச்சியில் மர்ம
பூச்சி கடித்து முதியவர் நுரை தள்ளி சாவு
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஷீலா நகரை சேர்ந்தவர் சின்னையா (வயது 60) இவர் சம்பவத்தன்று செட்டிப்பட்டி கொம்பை வாய்க்கால் பகுதியில் சென்று வந்த போது அவரை திடீரென்று ஒரு மர்ம பூச்சி கடித்து உள்ளது
.இந்த சம்பவத்தில் அவரது வாயிலிருந்து நுரை தள்ளி மயங்கி விழுந்தார்.
இதையடுத்து சின்னையா ஆபத்தான நிலையில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த சின்னையா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்
இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

