Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் குடும்பத் தகராறு தட்டி கேட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரியை தாக்கிய பெண் ஊழியரின் கணவர் .

0

'- Advertisement -

திருச்சியில் குடும்பத் தகராறு தட்டி கேட்ட

நெடுஞ்சாலைத்துறை அதிகாரியை தாக்கிய பெண் ஊழியரின் கணவர் .

திருச்சி மாவட்டம் லால்குடி பள்ளிவிடை வி.துறையூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 35 ) இவரது மனைவி ஹேமா. இவர் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் மாநில நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் டைப்பிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார்.

சமீப காலமாக கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்த நிலையில் ராஜா நேற்று திடீரென

டிவிஎஸ் டோல்கேட் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்குள் நுழைந்தார்.

 

பின்னர் மனைவியிடம் அவர் சண்டை போட்டார் .இதனைப் பார்த்துக் கொண்டிருந்த உதவி பொறியாளர் சமயசக்தி ( வயது 44 ) என்பவர் ராஜாவை தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜா கூர்மையான ஆயுதம் மூலமாக அவரை தாக்கி விட்டு தப்பி சென்றார். இதில் உதவி பொறியாளர் முகத்தில் லேசான காயம் ஏற்பட்டது .

சக ஊழியர்கள் அவரை மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .பின்னர் சமயசக்தி அளித்த புகாரின் அடிப்படையில் ராஜா மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.