பணம் வாங்கிக்கொண்டு பதவி வழங்கிய திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு .
திருச்சி அதிமுக வடக்கு மாவட்டம் மற்றும் மாநகர் மாவட்டம் முழுவதும் பி சி ஆர் வழக்கு உள்ளவரிடம் பணம் பெற்றுக் கொண்டு அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பதவி அளித்ததாக கூறி ஓட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
அந்த போஸ்டரில் …..
மாண்புமிகு.
கழக பொதுச்செயலாளர் அவர்களே
நியாயம் வழங்கு! நியாயம் வழங்கு!!
திருச்சி TNSTC அண்ணா தொழிற்சங்கமா? மு.பரஞ்ஜோதியின் (மாவட்ட செயலாளர்) ஜாதி வெறி சங்கமா?
மலைக்கோட்டை கிளை ATP செயலாளர் P.பெரியசாமியை ஜாதி பெயர் சொல்லி கொலை வெறி தாக்குதல் நடத்தி PCR வழக்கு நிலுவையில் உள்ள S.தர்மராஜ்க்கு மண்டல செயலாளர் பதவி வழங்கியது நியாயமா?

நமது ஆட்சிக்காலத்தில் நம் அரசிற்கு எதிராக நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தி.மு.க வினருடன் சேர்ந்து வேலை நிறுத்தம் செய்த துரோகிகள் 9 நபருக்கு மண்டல துணை பொறுப்புகள் வழங்கியது
நம் அரசிற்கு எதிராக செயல்பட்டதற்கு பரிசா? அந்த பதவி.
திருச்சி LPF சங்கத்தில் உறுப்பினராக உள்ள நபருக்கு மண்டல துணை பொறுப்பா? திருச்சி மாவட்டத்தில் பணம் கொடுத்தால் பதவி என்ற நிலையை உருவாக்கிய மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!!
மாண்புமிகு அம்மாவிற்காகவும் நமது கட்சிக்காகவம் கிறை சென்றவர்களை பறக்கணித்திருப்பது நியாமா? நியாமா?
விசாரணை செய்து நடவடிக்கை எடு ! அம்மாவின் பெயர் காத்திடு!!
திருச்சி TNSTC மண்டல அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்கள் – திருச்சி மண்டலம் என அடிக்கப்பட்டுள்ளது .
இந்த போஸ்டரினால் திருச்சி அதிமுக வடக்கு மாவட்டம் மட்டுமில்லாமல் திருச்சி மாநகர் அதிமுகவினரிடமும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .