Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: மகளிர் விடியல் பயண புதிய பேருந்துகளை துவக்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

0

'- Advertisement -

மகளிர் விடியல் பயண புதிய பேருந்து மற்றும் நான்கு புதிய புறநகரப் பேருந்துகளை துவக்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி .

 

திருச்சிராப்பள்ளி மாவட்டம் சத்திரம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் ( லிமிடெட்) திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் ஒரு மகளிர் விடியல் பயண புதிய பேருந்து மற்றும் நான்கு புதிய புறநகரப் பேருந்துகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (14/06/2025) சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 

இந்நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர்

.மு. மதிவாணன் மாநகராட்சி துணை மேயர் .திவ்யா, திருச்சிராப்பள்ளி மண்டல பொது மேலாளர் சதீஷ்குமார் அவர்கள், துணை மேலாளர்கள் த

.சாமிநாதன், ரவி, போக்குவரத்து கழக பணியாளர்கள் ,தொழிற்சங்க பிரதிநிதிகள் ,உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இன்று இயக்கப்பட்ட பேருந்துகள் செல்லும் வழித்தடம் விபரம்:

Suresh

1.மகளிர் விடியல் பயணம் பேருந்து (.1.நகரப் பேருந்து )

மத்திய பேருந்து நிலையத்திலிருந்து , திருவெறும்பூர் என் ஐ டி வழியாக துவாக்குடி

 

புறநகர் பேருந்து

2. திருச்சியில் இருந்து விராலிமலை துவரங்குறிச்சி வழியாக மதுரை

3. திருச்சியில் இருந்து விராலிமலை துவரங்குறிச்சி வழியாக மதுரை

4. திருச்சியில் இருந்து திண்டுக்கல் தேனி வழியாக கம்பம்

5. மணப்பாறையில் இருந்து திருச்சி கரூர் வழியாக திருப்பூர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.