திருச்சி பொன்மலையில் கத்தியை காட்டி மிரட்டிய பணம் பறித்த ரவுடி கைது .

திருச்சி கீழக்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 32 )இவர் பொன்மலை பூங்கா அருகில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திருச்சி மேல கல்கண்டார் கோட்டையை சேர்ந்த மணிகண்டன் (வயது 22) என்ற ரவுடி கத்தியை காட்டி மிரட்டி ராஜ்குமார்யிடம் இருந்து ரூ.1000 பணத்தை பறிக்க முயற்சி செய்துள்ளார்.
பிறகு அங்கிருந்து மணிகண்டன் தப்பித்து ஓடி விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து அவரிடம் இருந்து பணம் மற்றும் கத்தியை பறிமுதல் செய்துள்ளனர்.