திருச்சி மண்டல

அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டல அலுவலகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது .அந்த வகையில் இன்று குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியினை துணை மேலாளர் (பணியாளர் மற்றும் சட்டம்) ராமநாதன் முன்னிலையில் அனைத்து போக்குவரத்து கழக பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் துணை மேலாளர் ஜூலியஸ் அற்புத ராயன் (வழி தாள் வசூல் )மற்றும் அனைத்து போக்குவரத்துக் கழகம் பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.