Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் நாளை புதன்கிழமை மாலை 4 மணி வரை மின் தடை .

0

'- Advertisement -

தமிழ்நாடு மின்சார வாரியம் சீரான மின் இணை மின் விநியோகத்தை முன்னிட்டு சுழற்சி முறையில் மின் பாதைகளில் பராமரிப்பு பணி மேற்கொள்வது வழக்கம் .

 

அத்தகைய சமயங்களில் சம்பந்தப்பட்ட இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

அதன்படி, திருச்சி கோர்ட்டு வளாகம் துணை மின் நிலையத்தில் நாளை மே 20 (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.

 

இதனால் நாளை காலை 9.45 மணி முதல் பகல் 2 மணி வரை பின்வரும் இடங்களில் மின் நிறுத்தம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.மின்தடை பகுதிகள் விபரம்: அதன்படி, புதுரெட்டித்தெரு, பொன்விழாநகர், கிருஷ்ணன்கோவில் தெரு, பக்காளிதெரு, மத்திய பஸ்நிலையம், கண்டித்தெரு, பாரதிதாசன் சாலை, ராயல் சாலை, அலெக்ஸ்சாண்டிரியா சாலை, எஸ்.பி.ஐ.காலனி, பென்வெல்ஸ்சாலை, வார்னஸ்சாலை, அண்ணாநகர், குத்பிஷாநகர், உழவர்சந்தை, ஜெனரல்பஜார், கீழசத்திரம்சாலை, பட்டாபிராமன்சாலை, காவேரி மருத்துவமனை, புத்தூர் ஆகிய இடங்கள்.

 

அதே போன்று அருணாதியேட்டர், கணபதிபுரம், தாலுகா அலுவலக சாலை, வில்லியம்ஸ் சாலை, சோனா மீனா தியேட்டர், கோர்ட்டு பகுதி, அரசு பொதுமருத்துவமனை, பீமநகர், செடல்மாரியம்மன்கோவில், கூனிபஜார், ரெனால்ட்ஸ் சாலை, லாசன்ஸ் சாலை, வண்ணாரப்பேட்டை, பாரதிதாசன் காலனி, ஈ.வெ.ரா.சாலை, வயலூர்சாலை, பாரதிநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.