திருச்சி சுப்பிரமணியபுரத்தில்
மின்சாரம் தாக்கி முதியவர் பலியான பரிதாப சம்பவம் .
திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெயலானியா நான்காவது தெருவை சேர்ந்தவர் நாராயணன் (வயது 73 ) இவர் நேற்று தனது வீட்டில் எலக்ட்ரீசியன் வேலை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவரை உடனடியாக மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நாராயணன் மாலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து கே.கே. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.