Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் விபத்து இழப்பீடு வழங்காததால் அரசுப்பேருந்து ஜப்தி.

0

'- Advertisement -

திருச்சியில் விபத்து இழப்பீடு வழங்காததால்

அரசுப்பேருந்து ஜப்தி.

 

Suresh

திருச்சி காஜாமலை இந்திரா நகரை சேர்ந்தவர் கருப்பையா (வயது 59). இவர் திருப்பூரில் பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார். அவர் கடந்த 18.4.2016 அன்று திருப்பூர் பல்லடம் சாலையில் தெற்கு பாளையம் அருகே சாலையை கடக்க முயன்ற போது, எதிரே வந்த அரசுப்பேருந்து அவர் மீது மோதியதில் உயிரிழந்தார். இது குறித்து பல்லடம் போலீசார் வழக்கப்பதிந்து விசாரித்து வந்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சி மாட்ட கூடுதல் சிறப்பு மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோருரிமை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் 20.9.2023 ல் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், ரூ.12,52,400 கருப்பையா குடும்பத்தாருக்கு அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிபதி நந்தினி தீர்ப்பளித்தார்.

ஆனால், அரசு போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளது. எனவே பாதிக்கப்பட்டவர் தரப்பில் 2024 ஆம் ஆண்டு நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு குறித்து விசாரித்த நீதிபதி நந்தினி, இழப்பீடு வழங்காத அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான ஒரு பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

 

இதையடுத்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த அரசுப்பேருந்து ஒன்றை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து எடுத்து வந்து நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.