திருச்சியில்
தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி
தாய் மகள் கைது.
திருச்சி கே.கே.நகர், ரெங்கா நகரை சேர்ந்தவர் மீனா பார்வதி மற்றும் அவருடைய மகள் விசாலாட்சி ஆகிய இருவரும் சேர்ந்து தீபாவளி பண்டு, 50ஆயிரம், ஒரு லட்சம்,
2, லட்சம் 5 லட்சம் ஏலச்சீட்டுகள் நடத்தி பொது மக்களிடம் பணத்தை பெற்று கொண்டார்.குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி உள்ளனர். பணத்தை ஏமாந்த பொதுமக்கள்
இது தொடர்பாக திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில்
மீனாபார்வதி மற்றும் விசாலாட்சி ஆகிய இருவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்து மோசடி வழக்கு
திருச்சியில் மேலும் இரண்டு பேர் கைது.
பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை.
திருச்சியில் தனியார் நிறுவனம் தொடங்கி அதில் முதலீடு செய்ய கோரி பொதுமக்கள் பலரை ஏமாற்றி மோசடி செய்த வழக்கில்
சம்மந்தப்பட்டவர்கள் திருச்சியில் உள்ள ஒட்டலில் கூட்டம் நடத்தியதாக திருச்சி பொருளாதார குற்றப்பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையில் தனிப் படையினர் கூட்டம் நடந்த ஒட்டலுக்கு சென்று விசாரணை செய்தனர். அதில் தனியார் மற்றும் அதன் கிளை நிறுவனங்களை நடத்தி மோசடி செய்து பல வழக்குகளில் தொடர்புடைய நபர் மற்றும் அந்த நிறுவனத்தின் டாப் லீடர்களான ராஜப்பா, சாகுல்ஹமீது, பாபு ஆகியோர்கள் சுமார் 40 நபர்களை சேர்த்து கூட்டம் நடத்தி அதில் பொதுமக்களை முதலீடு செய்ய துண்டியுள்ளார்கள் என தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்கள் அவர்கள் ஆரம்பிக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஏமாற்றப்படுவார்கள் என தனி அறிக்கை கொடுத்தின் பேரில் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்பந்தப்பட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
அதில் டாப் லீடர் ராஜப்பாவை ஏற்கனவே கைது செய்து விட்டனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த சாகுல்ஹமீது,
பாபு ஆகிய இருவரையும் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுகந்தி தலைமையிலான குழுவினர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.