குற்ற சம்பவங்களை ஈடுபடும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் . திருச்சி மாவட்ட புதிய எஸ்.பி. செல்வ நாகரத்தினம் .
குற்ற சம்பவங்களை ஈடுபடும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் . திருச்சி மாவட்ட புதிய எஸ்.பி. செல்வ நாகரத்தினம் .
திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பதவி வகித்த வீ. வருண்குமாா், திருச்சி சரக டிஐஜியாக பதவி உயா்வு பெற்று மாறுதலாகிச் சென்ற நிலையில், திருச்சி மாவட்ட புதிய கண்காணிப்பாளராக எஸ். செல்வ நாகரத்தினம் நேற்று திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இதைத்தொடா்ந்து அவா் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-
மாவட்டத்தில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் சட்டம் – ஒழுங்கு பேணிக் காக்கப்படும். குற்றச் செயல்களில் ஈடுபடும் ரெளடிகள் மற்றும் சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் .
திருச்சி மாவட்டத்தில் நடந்து வரும் சொத்து தொடா்பான வழக்குகளை விரைந்து முடிக்கவும், தொடா்புடைய குற்றத்தில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும், குற்றங்கள் நடைபெறாமல் இருக்கவும், தொடா்புடையோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
காவல்துறை தொடா்பான பொது மக்களின் குறைகள் உடனுக்குடன் களைந்து அவற்றுக்குத் தீா்வு காணப்படும். பொதுமக்களுடனான காவல் துறையினா் நல்லுறவு மேம்படுத்தப்படும். காவல் துறையினரின் குறைகளைக் கேட்டறிந்து அவா்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, அவா்கள் மனச்சோா்வின்றி பணியாற்ற வழிவகை செய்யப்படும்.
மேலும் காவல் நிலையங்களின் செயல்பாடு மேம்படுத்தப்படும் என புதிய காவல்துறை கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற பின் அறிந்த பேட்டி போது கூறினார் .