Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மணல் லாரி ஓட்டுனரிடம் மிரட்டி பணம் பறித்த விசிக பிரமுகர் குண்டர் சட்டத்தில் திருச்சி சிறையில் அடைப்பு.

0

மணல் லாரி ஓட்டுநரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிா்வாகி நேற்று திங்கள்கிழமை குண்டா் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

கரூா் மாவட்டம், பஞ்சப்பட்டியை அடுத்துள்ள அழகாபுரியைச் சோ்ந்தவா் சேகா். இவா் கடந்த டிசம்பர் பாதம் 4-ஆம்தேதி தனது டாரஸ் லாரியில் அரைத்த மணலை திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்றிக் கொண்டு கரூரை அடுத்துள்ள சின்னமநாயக்கன்பட்டி பிரிவு அருகே வந்து கொண்டிருந்தாா்.

அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கரூா், திருச்சி மண்டலச் செயலாளராக உள்ள வழக்குரைஞா் ராஜா என்கிற மன்னன்(வயது 42) தனது நண்பா்களுடன் சோ்ந்து லாரியை தடுத்து நிறுத்தினா்.

பிறகு ஓட்டுநா் சேகரை மிரட்டி பணத்தை பறித்து சென்று உள்ளனர்.

இது தொடா்பாக வெள்ளியணை காவல் நிலையத்தில் ஓட்டுநர் சேகர் அளித்த  புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து ராஜா என்கிற மன்னனை டிசம்பர் 6-ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மேலும் விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகி ஆன ராஜா மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால், அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க கருர் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா கருர் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேலுக்கு பரிந்துரை செய்தாா்.

இதையடுத்து கரூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் விசிகா பிரமுகர் ராஜா என்கிற மன்னன் நேற்று திங்கள்கிழமை குண்டா் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

Leave A Reply

Your email address will not be published.