Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி:அதிமுக 53ம் ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு நடைபெறும் நிகழ்வுகளில் தொண்டர்கள் அனைவரும் திரளாக பங்கேற்க முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அழைப்பு .

0

 

முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் அணி திருச்சி மாவட்ட செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரால் போற்றி வளர்க்கப்பட்டு பல்வேறு வரலாற்று சிறப்புகளைப் படைத்திட்ட “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” வருகின்ற 17.10.2024 வியாழக்கிழமை அன்று 53-வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு ஒருங்கிணைப்பாளர், முன்னாள் தமிழக முதல்வர், ஒ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர், முன்னாள் அமைச்சர், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளருமான வைத்திலிங்கம், ஆகியோர்களின் ஆணைக்கிணங்க திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.கழகம் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பாக திருச்சி கோர்ட் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். அவர்களின் திருஉருவ சிலைக்கு நாளை 17.10.2024 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.

அதுசமயம் கட்சியின் நிர்வாகிகள்,முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் மாவட்ட செயலாளர்கள், முன்னாள் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட பகுதி , வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.ஜி.ஆர். மன்றம், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்க பேரவை, வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, இலக்கிய அணி, மருத்துவ அணி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவினை சேர்ந்தவர்கள், வர்த்தக அணி, கலை பிரிவு, முன்னாள் கோட்டத் தலைவர்கள், உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குநர்கள், தலைமை கழக பேச்சாளர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம் என வெல்லமண்டி நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.