திருச்சி உறையூரில் மது போதையில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாப பலி.
திருச்சி உறையூர் சாலை பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 56).
இரும்பு கம்பெனியில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது.
இந்த நிலையில் சம்பவ நாளன்று பணி முடிந்து குடிபோதையில் வீடு திரும்பிய அவர் வீட்டின் மாடிக்கு சென்ற போது படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக மனைவி சித்ரா அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார் .
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கந்தசாமி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.