திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிரைனோ பிரைன் சார்பில் அபாகஸ் போட்டி நடைபெற்றது.
திருச்சி பிரெய்னோ பிரைன் சார்பில் ஆண்டுதோறும் அபாகஸ் போட்டி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வகையில் 154வது மண்டல அளவிலான அபாகஸ் போட்டி இன்று திருச்சி ஜோசப் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
5 முதல் 14 வயது குழந்தைக்கான அபாகஸ் மன கணிதப் போட்டி நடைபெற்றது
பிரைனோ பிரைன் நிர்வாக இயக்குனர் ஆனந்த் சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
மண்டல பொறுப்பாளர் ப்ரியா சிவலிங்கம் முன்னிலை வகித்தார்.
நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் இப்போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
முடிவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது .