Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நான் கூப்பிடும் போதெல்லாம் ஆசைக்கு இனங்காவிட்டால் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என 47வயது பெண்ணை மிரட்டிய காவலாளி கைது.

0

'- Advertisement -

 

கோவை மாவட்டம் வேலாண்டிபாளையம் கிராமம் காந்தி காலனி மேற்கு வீதியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 49). இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். அப்போது அவருக்கு அங்கு வேலை பார்த்த 47 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த வழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதனையடுத்து இருவரும் நெருக்கமாக பழகி, தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார்.

இதை அந்த பெண்ணுக்கு தெரியாமல் தனது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். மேலும் அந்த ஆபாச வீடியோவை காட்டி நான் கூப்பிடும் போதெல்லாம் தனது ஆசைக்கு இணங்காவிட்டால் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று கூறி மிரட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்தத அந்த பெண் வேறு வழியில்லாமல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரங்கசாமியை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து வந்ததுமே ரங்கசாமி மீண்டும் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு உல்லாசத்திற்கு அழைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து அந்த பெண் மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரங்கசாமியை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.