அம்பேத்கரின் 67 வது நினைவு நாளை முன்னிட்டு திமுக மாநகர செயலாளர் மதிவாணன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை .
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழக செயலாளரும் அமைச்சரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில் சட்ட மாமேதை அம்பேத்கரின் 67 வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி இ.பி. ரோட்டில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன் தலைமையில்,
தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன், பி.எம் சபியுல்லா இவர்களின் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நிகழ்வில் கழக நிர்வாகிகள் கோவிந்தராஜ் செங்குட்டுவன் மூக்கன் நூர்கான் சந்திரமோகன் சரோஜினி பகுதி கழகச் செயலாளர்கள் நீலமேகம், கொட்டப்பட்டு தர்மராஜ் பாபு மோகன் ராஜ்முகமது மணிவேல் சிவக்குமார் அன்பழகன் சிவக்குமார் மற்றும் மாவட்ட மாநகர தொகுதி அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் வட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.