Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் குடும்ப தகராறில் கல்லூரி பெண் ஊழியருக்கு அரிவாள் வெட்டு கணவன் கைது.

0

'- Advertisement -

 

குடும்பத்தகராறில் திருச்சி கல்லூரி பெண் ஊழியருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.
கணவன் கைது .

இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:

திருச்சி சுப்பிரமணியபுரம், கென்னடி தெருவில் சேர்ந்தவர் முகமதுபாபு என்ற கண்ணன் (வயது 40). பெயிண்டர். இவருடைய மனைவி சமீமாபேகம் (வயது 34). இவர் சுப்ரமணியபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சமீமாபேகம் தனது தாயாருடன் வசித்து வந்தார். முகமதுபாபு அவ்வப்போது, அவர்கள் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

அதுபோல் நேற்று இரவு முகமதுபாபு வீட்டுக்கு வந்த போது கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த முகமதுபாபு தனது மனைவி சமீபாபேகத்தை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இதில் தலை, கழுத்து உள்ளிட்ட பகுதியில் அவருக்கு வெட்டு விழுந்தது.
ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர், தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி தகவல் அறிந்த கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமதுபாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.