Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் அவசர உதவி மையம்:டிஜிபி சைலேந்திரபாபு துவக்கி வைத்தார்.

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில்
அவசர உதவி மையம் .
டிஜிபி சைலேந்திர பாபு துவக்கி வைத்தார்.

திருச்சி துவாக்குடி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் நடைபெற்ற அவசர உதவி மைய தொடக்க நிகழ்ச்சியில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு பேசுகையில், கடந்த ஒரு ஆண்டில் கட்டுப்பாட்டு அறை மூலம் 55 ஆயிரம் அழைப்புகள் புகார்களாக வந்துள்ளது.

தமிழகத்தில் 1498 காவல் நிலையங்கள் உள்ளது. அதில் 10 லட்சம் புகார்கள் பெறப்பட்டுள்ளது. மகளிர் காவல் நிலையங்களில் 75 ஆயிரம் புகார்கள் வந்துள்ளது. காவலர்கள் முகத்தை வைத்து குற்றவாளிகளை கண்டறியும் ஆப் மூலம் 5,531 பேரை இதுவரை கண்டறிந்து உள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் அறிவியல் வளர்ச்சி காரணமாக, தமிழ்நாடு போலீசால் இருந்த இடத்தில் இருந்தே கண்காணிக்க முடிகிறது என பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் என்.ஐ.டி துணை இயக்குனர் அருண் குமார், மாநகர போலீஸ் கமிஷனர் சத்திய பிரியா, எஸ்.பி.சுஜித்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக தேசிய தொழில்நுட்ப கழகத்தின் வளாகத்தில் மாணவர்கள் கண்டுபிடித்த ட்ரோன் கேமரா செயல்பாட்டை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.